அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ரூபாய் 369 இலட்சத்திற்கும் அதிக வருமான வரியை செலுத்தாமைக்கு உண்மையான காரணம் ஏதாவது இருப்பின் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ரூ.36,975,959 தனிநபர் வருமான வரி செலுத்தாமைக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக தேசிய இறைவரித் திணைக்களம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பிணை வழங்கப்பட்டுள்ள சஜின் வாஸ் குணவர்தன நீதிமன்றில் முன்னிலையாகிருந்தார்.

Related posts

கொவிட் 19 – தொடர்ந்தும் 132 நோயாளிகள் சிகிச்சையில்

நாங்கள் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி அநுர

editor

சுயேச்சைக் கட்சிகளின் புதிய கூட்டணியின் தலைமை விமலுக்கு