தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு அண்மையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.