அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது – காரணம் வௌியானது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (05) இரவு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மத் சாலி நளீம் – வௌியான வர்த்தமானி

editor

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தம்

முகக்கவசம் அணியாத 1,214 பேர் சுயதனிமைப்படுத்தலில்