அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் வாக்குமூம் பதிவு!

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்திச் செலுத்துவதற்காக ராஜகிரிய பகுதியில் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்தது தொடர்பான விசாரணை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று (17) முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக அவரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலஞ்ச , ஊழல் ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அறிவிப்பின் பிரகாரம், நிமல் சிறிபால டி சில்வா, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார்

வாடகை அடிப்படையில் தொடர்புடைய கட்டிடத்தை பெற்றமை தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, தலதா அத்துகோரள, மஹிந்த சமரசிங்க, கயந்த கருணாதிலக்க உள்ளிட்ட சிலரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 233 பேர் அடையாளம்

இலங்கையில் உயரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கடந்த 48 மணித்தியாலங்களில் 30 பேர் பலி