அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் இரண்டு வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இரண்டு கணக்குகளின் இருப்புத் தொகை சுமார் 200 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 53 (1) ஆவது பிரிவின்படி நேற்று (17) முதல் இடைநிறுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த இடைநீக்க உத்தரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மேலும் நீடிக்க ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

கடந்த காலங்களில், இந்த விசாரணைகள் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பலரின் சொத்துக்கள் பலவற்றை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முடக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கம் பல முடிவுகளை எடுத்துள்ளது – ஜனாதிபதி அநுர

editor

போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாக சம்பத் மனம்பேரி ஒப்புக் கொண்டார்

editor

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor