உள்நாடு

முச்சக்கரவண்டி கட்டணத்தினை அதிகரிக்க சாரதிகள் கோரிக்கை

(UTV | கொழும்பு) – ரூபாவின் நாணய வீழ்ச்சியினை தொடர்ந்து, நேற்று(10) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க ஐ.ஓ.சி தீர்மானித்ததையடுத்து, இலங்கையில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் தற்போது தமது பயணக் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (11) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, முதல் கிலோமீட்டருக்கான அடிப்படைக் கட்டணம் ரூபா. 80 / – ஆகவும் இரண்டாவது கிலோமீட்டரில் இருந்து கட்டணம் ரூ. 50 / – ஆகவும் உயர்த்த தாம் பரிசீலித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டின் பிரச்சினைகளுக்கு முற்போக்கான தீர்வுகளை வழங்குவதே தவிர சீர்குலைப்பது எமது நோக்கமல்ல – சஜித்

editor

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று போராட்டத்தில்

ஜனக ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல்