கிசு கிசு

முக்கிய நகரங்களை மூட வேண்டிய நிலையும் தோன்றலாம்

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஒவ்வொரு நாடும் மும்முரமாக ஈடுபட்டு வருகையில், இலங்கையிலும் கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மேலும் பீதியினைக் கிளப்பியுள்ளது எனலாம்.

குறித்த வைரஸ் இனைத் தடுக்க சுகாதார அமைச்சினால் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டங்களை அரசு வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொரோனா இலங்கையிலும் வியாபிக்கத் தொடங்கினால் இலங்கையின் முக்கிய நகரங்களை மூட வேண்டிய நிலை தோன்றவும் கூடும் என சுகாதார அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்

முஸ்லிம் கடைகளில் மலட்டுத் தன்மை கொத்து, உள்ளாடைகள் இப்போது இல்லையா? [VIDEO]

சங்ரில்லா ஹோட்டல் இன்று மீண்டும் திறப்பு