உள்நாடு

முக்கவசங்கள் இன்றி பயணிப்போருக்கு பிரத்தியேக வகுப்பு

(UTV | கொழும்பு) – முக்கவசங்கள் இன்றி பயணிக்கும் மற்றும் முகக்கவசங்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருப்பவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு விசேட மருத்துவ ஆலோசனை வகுப்புகள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 24 மணி நேர நிறைவில் முகக்கவசங்கள் இன்றி நடமாடிக்கொண்டிருந்த 1,522 பேர் பொலிசாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சமூக இடைவெளியை பேணாத 1,340 பேருக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு கால வரையறையின்றி பூட்டு

மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் 62 பயணிகளைக் காப்பாற்றிய பஸ் சாரதி

editor

ஜனாதிபதிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருமாறு அழைப்பு