உள்நாடு

மு.கா உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு

(UTVNEWS | TRINCOMALEE) – கிண்ணியா – மூதூர் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளனர்.

கிண்ணியா நகரசபையின் பிரதித் தவிசாளர் ஐ.சப்ரீன் (ஐயூப் நளீம்), மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் தானீஸ் ஆகியோர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், இன்று (08) கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர்.

கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகரசபை, பிரதேசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது

கொழும்பில் தமிழர்களை அச்சுறுத்தும் பொலிஸ் – சபையில் மனோ

மீண்டும் ஒரு கஷ்டமான யுகம் வந்தால் சஜித்தும் அனுரவும் ஓடிவிடுவார்கள் – ஜனாதிபதி ரணில்

editor