அரச வைத்தியர் சங்கத்தின் பலாங்கொடை கிளையினால் 05 இலட்சம் ரூபா நிதி, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீள்கட்டுமான இலங்கை (Rebuild Srilanka) நிதியத்துக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான காசோலை சப்ரகமுவ மாகாண ஆளுநர் திருமதி சம்பா ஜானகி ராஜரத்னவிடம் நேற்று முன்தினம் (16) சப்ரகமுவ மாகாண சபை வளாகத்தில் சங்க உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பலாங்கொடை கிளையின் உப தலைவர் வைத்தியர் இந்திக்க தர்மப்பிரிய, செயலாளர் டாக்டர் துஷார கமகே, ஏற்பாட்டாளர் டாக்டர் சுபுன் கொடகும்புர ஆகியோர் கலந்துகொண்டனர்.
-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்
