உள்நாடு

மீண்டும் வைத்திய பணியில் ஷாபி ஷிஹாப்தீன்

(UTV | கொழும்பு) – கட்டாய விடுமுறையில் பணி இடைநிறுத்தம் செய்த குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும் கட்டாய விடுப்புக் காலத்திற்குரிய அனைத்து ஊதியங்களையும் அவருக்கு வழங்கவும் பொதுச் சேவை ஆணைக்குழு சுகாதாரச் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

இவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய காலப்பகுதியி பெலோபியன் குழாயில் தடை ஏற்படுத்துவதன் ஊடாக  சிங்கள தாய்மார்களுக்கு சட்ட விரோத கருத்தடைசெய்தார் என பல்வேறு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டது.

இது நாடளாவியரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், 2019. மே 24, முதல் வைத்தியர் ஷாபியை கட்டாய விடுப்பில் அனுப்ப சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை – பிரதமர் ஹரினி

editor

உள்ளூராட்சித் தேர்தலில் அமோக வெற்றி உறுதி – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பி இந்திக அனுருத்த

editor

பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் -பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது