நுகேகொடை சில்லறை விற்பனை நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான தகவல்களைத் தெளிவுபடுத்துவதற்காக லங்கா சீனி (தனியார்) நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம் (31), குறித்த விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டதன் காரணமாக, அன்றைய தினம் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று பௌர்ணமி (01) (Poya) தின விடுமுறை என்பதால், வழமையான விடுமுறை தின நடைமுறைக்கு அமைய விற்பனை நிலையம் மூடப்பட்டிருந்தது.
இது குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஏனைய அனைத்து தகவல்களும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என லங்கா சீனி நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தற்போது நுகேகொடை சில்லறை விற்பனை நிலையம் முழுமையாகத் திறக்கப்பட்டு, வழமை போன்று நுகர்வோருக்கான சேவைகளை வழங்கி வருகின்றது.
இதன்படி, விற்பனை நிலையத்தின் திறந்திருக்கும் நேரங்கள் பின்வருமாறு:
*வார நாட்கள் மற்றும் சனிக்கிழமை: மு.ப 9.00 மணி முதல் பி.ப 7.00 மணி வரை.
*ஞாயிற்றுக்கிழமை: மு.ப 9.00 மணி முதல் பி.ப 2.00 மணி வரை.
பொதுமக்கள் இவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், நிறுவனம் வெளியிடும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரம் பின்பற்றுமாறும் லங்கா சீனி (தனியார்) நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

