உள்நாடு

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவிக்கையில், பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்களை வழங்காமையே இதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பவுசர் உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு திங்கட்கிழமை பிற்பகல் நிறைவடைந்த போதிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்தும் எரிபொருள் நிரப்ப முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சுகாதார அமைச்சின் வேண்டுகோள்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் 15% IT வரி விதிப்பு தொடர்பாக சபையில் சஜித் கேள்வி

editor

ஐ.ம.சக்தி : தேசியப்பட்டியல் பெயர் அடங்கிய விசேட வரத்தமானி அறிவித்தல்