உள்நாடு

மிரிஹான கலவரம் : 150க்கும் மேற்பட்டவர்களிடம் CID வாக்குமூலம்

(UTV | கொழும்பு) – மிரிஹான போராட்டம் தொடர்பில் 150க்கும் மேற்பட்டவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியின் வாசஸ்தலத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 21 பேர் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 6 பேரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் – பிரதமர் ஹரிணி

editor

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம்

editor

இதுவரை 894 கடற்படையினர் குணமடைந்தனர்