உள்நாடு

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு – மூவர் கைது

(UTV|கொழும்பு)- கொழும்பு மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி மாளிகாவத்தை பகுதியிலுள்ள கட்டடத் தொகுதியொன்றுக்கு அருகாமையில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது

சம்பவம் தொடர்பில் கடந்த 31 ஆம் திகதி ஏற்கனவே ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார் .

இந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

Related posts

வெளிநாடு செல்லத் தடை – அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை

editor

05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

editor

ஜனாதிபதி மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கு இடையில் சந்திப்பு

editor