உள்நாடு

மாலைதீவு எயார் விமானம் இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கியது

(UTV | கொழும்பு) – கொழும்பின் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகள் சுமார் 55 வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று காலை 8.47 மணியளவில் மாலைதீவு எயார் விமானம் இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரத்மலானை விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு பொதுவாக 60 அமெரிக்க டொலர்களாக இருக்கும் விமான நிலைய சேவை வரி 30 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்படும்.

இதற்கிடையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியாவுக்கான சர்வதேச விமானங்கள் இன்று மீண்டும் தொடங்கும்.

40 நாடுகளைச் சேர்ந்த 60 கேரியர்கள் இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மோசமான கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, மார்ச் 2020 இல் அனைத்து சர்வதேச விமானங்களையும் இந்தியா இடைநிறுத்தியது.

Related posts

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் – அனுர

editor

பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க CID யில் ஆஜராகியுள்ளனர்.

editor

கடன் சுமை குறித்து பிரதமர் அம்பலப்படுத்தினார்