வகைப்படுத்தப்படாத

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சுவையான சூப்…

தேவையான பொருட்கள் :

எண்ணெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 7
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் – 2
தக்காளி – 1
முருங்கை இலை – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு, மிளகு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

பூண்டை நசுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பூண்டு, துருவிய இஞ்சி போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு முருங்கை இலைகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக விடவும்.

கடைசியாக உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

இந்த சூப் மிகவும் சத்து நிறைந்தது. வாரம் மூன்று முறை இந்த சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது.

Related posts

இலங்கை கேந்திர நிலையமாக மாறுவதற்கு சீனா கைகொடுக்கும்…

අර්ජුන මහේන්ද්‍රන්ට වරෙන්තු නිකුත් කරයි .

SLMC ordered to register all foreign graduates