உலகம்

மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க வீசா கட்டணம் உயர்வு

மாணவர்​கள், சுற்​றுலா பயணி​கள் வீசா, இந்​தி​யப் பணி​யாளர்​கள் அதி​கம் பயன்​படுத்​தும் எச்​-1பி வீசா கட்​ட​ணத்தை ரூ.16 ,000 (இந்திய மதிப்பில்) இருந்து ரூ.40 ஆயிர​மாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், இந்த கட்​ட​ணம் ஆண்​டு​தோறும் பணவீக்​கத்​துக்கு ஏற்ப உயர்த்​தப்​படும் என்​றும் 2026ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த ஜனவரி​யில் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்​பேற்ற டொனால்ட் ட்ரம்ப் பல்​வேறு சீர்​திருத்​தங்​களை அமல்​படுத்தி வரு​கிறார். மேலும் பல்​வேறு நாடு​களுக்​கான இறக்​குமதி வரியை​யும் உயர்த்தி வரு​கிறார்.

இதனிடையே, கடந்த ஜூலை 4ஆம் திகதி ‘ஒரு மிகப்​பெரிய அழகிய மசோ​தா’ என்ற மசோ​தா​வில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்​திட்​டு, அதனை சட்​ட​மாக்கி உள்​ளார்.

அதன்​படி, தொழில்​முனை​வோர்​கள், மாணவர்​கள், சுற்​றுலாப் பயணி​களுக்​கான வீசா பெறுவதற்கு, ஒரு குறிப்​பிட்ட தொகையை வைப்பு தொகை​யாக செலுத்த வேண்​டும். பணவீக்​கத்​தின் அடிப்​படை​யில் ஆண்​டு​தோறும் இந்​தக் கட்​ட​ணம் மாறு​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பாது​காப்பு இருப்​புத் தொகை என்ற பெயரில் இந்​தத் தொகை வசூலிக்​கப்​படு​கிறது. சில குறிப்​பிட்ட நிபந்​தனை​களின் அடிப்​படையில் இந்த இருப்​புத் தொகை திரும்ப அளிக்​கப்​படும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

முக்​கிய​மாக வீசா காலாவதியானவுடன் நீட்​டிப்பு கோராமல் உடனடி​யாக அமெரிக்​காவை விட்டு வெளி​யேறு​பவர்​களுக்கு இந்​தத் தொகை திரும்ப அளிக்​கப்​படும்.

மாணவர்​கள், சுற்​றுலாப் பயணி​கள், எச்​1பி வீசா கட்​ட​ணத்தை அவர் கடுமை​யாக உயர்த்​தி​யுள்​ளார். தூதரக வீசா பிரிவு​களுக்கு (ஏ மற்​றும் ஜி) மட்​டும் இதில் விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது ரூ.16 ஆயிர​மாக உள்ள இந்​தக் கட்​ட​ணம் இனி ரூ.40 ஆயிரமாக உயர்த்​தப்​படும்.

சுற்​றுலா / வணி​கம் (பி-1/பி-2), மாணவர் (எஃப்​/எம்), வேலை (எச்​-1பி) மற்​றும் பரி​மாற்ற (ஜே) வீசாக்​கள் என எல்லா வகை​யான வீசாக்​களுக்​கும் இது பொருந்​தும்.

ஏற்​க​னவே உள்ள வீசா விண்​ணப்​பக் கட்​ட​ணங்​களு​டன் சேர்ந்​து, வீசா வழங்​கப்​படும் நேரத்தில் இந்​தக் கூடு​தல் கட்​ட​ணத்​தை​யும் அமெரிக்க உள்​நாட்​டுப் பாது​காப்​புத் துறை வசூலிக்​கும்​ என்​று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு

இஸ்ரேல் இடையேயான அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தானது

இந்தியாவில் ஒரு இலட்சம் பேரில் 17 பேருக்கு கொரோனா