உள்நாடு

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் பரவல் நிலைமை அதிகரித்து வந்ததன் காரணமாக மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதேவேளை, தற்போதைய நடமாட்டக்கட்டுப்பாடு தளர்வுகள் நாளை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, 19ஆம் திகதியின் பின்னரே மீளவும் பயணக்கட்டுப்பாடு விதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மக்கள் சந்திப்பு காரியாலய பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது

பொறாமைத்தன அரசியல் கலாச்சாரம் கைவிடப்பட வேண்டும் – சஜித்

editor

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் அறிவிக்கப்படும் விதம்

editor