வகைப்படுத்தப்படாத

மழையுடன் கூடிய காலநிலை

(UDHAYAM, COLOMBO) – சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கு ,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழைத்தூறல் காணப்படும்.

தென் மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பொலநறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு ,மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசுக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

சர்வதேசத்திற்கான செய்தியை வழங்குவதற்கான சந்தர்ப்பமாக வெசாக் தினத்தை பயன்படுத்த வேண்டும் – பிரதமர்

48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது

ஹெலிகாப்டர் விபத்து -நேபாள் சுற்றுலா துறை அமைச்சர் உயிரிழப்பு