சூடான செய்திகள் 1

மழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO)-நாடு முழுவதும், விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, வடக்கு, ஊவா, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

வளிமண்டலவியல் திணைக்களம்

 

 

 

Related posts

சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

எனக்கு உண்மையாகவே அரசியல் பிடிக்காது – அர்ச்சுனா எம்.பி அரசியலில் இருந்து ஓய்வா ?

editor

சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்ய கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை