உள்நாடுகாலநிலை

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் மிதமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

Related posts

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினால் போராட்டம்

editor

ஜனவரி 60 முதல் ஓய்வூதியம் பெறும் சட்டம் அமுலுக்கு

போலி நாணயத்தாள்களுடன் 52 வயதுடைய பெண் ஒருவர் கைது

editor