உள்நாடு

மருந்துகளின் விலைகள் மீண்டும் உயர்வு

(UTV | கொழும்பு) – மருந்து பொருட்களின் விலைகளை 40 சதவீதத்தினால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ஜயசுமனவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2015 ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழ் மருந்து விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 60 மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பெரசிட்டமோல்,அட்டோவாஸ்டடின், எனலாபிரில் ,அஸ்பிரின் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

Related posts

பல்கலைக்கழக மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் கைது!

editor

VAT தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு!

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!