உள்நாடுபிராந்தியம்

மருதானையில் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்து – ஒருவர் பலி

கொழும்பு – மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டார்லி வீதியில் நேற்று வியாழக்கிழமை (13) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, சைக்கிளின் செலுத்தனர் படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காரின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து வெளியேற தீர்மானம்

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் – சந்தேக நபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

editor

இந்திய படகுகள் யாழில் ஏலம்