மன்னார், பேசாலை கடலில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 17 மற்றும் 18 வதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர்.
நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன், மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
