உள்நாடு

மன்னாரில் ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது

13 கிலோ கிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 32 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 31ஆம் திகதி மன்னார், நாச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், ஆமை இறைச்சி, முட்டைகள் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

குறுகிய நாட்களுக்குள் அதிகளவில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு!

“Women in Politics” அங்குரார்ப்பணம் – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர

நீர்கொழும்பு உணவகம் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் சரண்