உள்நாடுபிராந்தியம்

மனநலம் பாதிக்கப்பட்டவர் தாக்கியதில் ஒருவர் பலி

நாகொடை, கம்மெத்தேகொட பகுதியில் ஒருவர் பொல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (10) பிற்பகல் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாகொடை, கம்மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தற்போதைய விசாரணையில் சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக நாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

2024 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை வெளியீடு – நிதி அமைச்சு.

தடை தாண்டல் சம்பியனான மதுஷானி தற்கொலை

யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சிக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை

editor