அரசியல்உள்நாடு

மதுபோதையில் தேர்தல் பணிகளை செய்தவர் கைது

தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வேன் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களுடன் தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பயணித்த வேன் சாரதி கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

இரண்டாவது நாளாகவும் சரிவை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

editor

நிமல் லன்சாவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை