அரசியல்உள்நாடு

மக்கள் ஆணை இல்லாதவர்கள் இன்று ரணில் தலைமையில் ஒன்று சேர்கிறார்கள் – கருணைநாதன் இளங்குமரன் எம்.பி

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் இன்று கூட்டுச் சேர கூட்டம் நடத்துகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.

நேற்று (16) கட்சியின் யாழ். சாவகச்சேரி அலுவலகத்தில் ஊடக சந்திப்பை போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்களின் ஆணை மூலம் 266 சபைகளை பெரும்பான்மையாக பெற்று இருக்கின்றோம்.

மக்கள் ஆணை இல்லாதவர்கள் இன்று ஒன்று சேர்கிறார்கள் ரணில் தலைமையில், இதே ரணிலையும் ரணில் அரசாங்கத்தையும் மக்கள் ஒட்டுமொத்தமாக விரட்டி அடித்து உள்ளார்கள்.

இவர்கள் மக்களை அணி திரட்டுவதை விட்டு அவர்கள் அணி திரட்டுகின்றார்கள் என தெரிவித்தார்.

-பிரதீபன்

Related posts

மகளையும் மகளின் தோழியையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

நாம் பில்லியன் கணக்கில் நாட்டுக்கு சேவை செய்துள்ளோம் – சஜித் பிரேமதாச

editor

நீராவியடி விகாரையில் கடமையாற்றிய நபர் அகால மரணம்