உள்நாடு

போலி நாணயத்தாள் தொடர்பில் பொலிசார் விடுத்துள்ள அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) –  பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களின் பாவனை அதிகரிக்கக்கூடும் என்பதால், கொடுக்கல் வாங்கல்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் போலி நாணயத்தாள் அச்சிடுவது அதிகரிக்கக்கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

இதனால் பொருள் கொள்வனவு மற்றும் பண கொடுக்கல் வாங்கலின் போது போலி நாணயத்தாள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கஜேந்தரகுமார் பொன்னம்பலம் வீட்டுக்கு முன்னாள் மீண்டும் பதற்றம் : குவிக்கப்பட்ட பாதுகப்புப்படை

ஐக்கிய மக்கள் சக்தியின்  ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 32 கோடி ரூபாவுக்கும் அதிகமான  நிதி!

அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லலாம்