உள்நாடு

போதைப்பொருளுடன் மூவர் கைது

(UTV|கொழும்பு) – புதுக்குடியிருப்பு பகுதியில் 6 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளி ஒன்றையும் காவல்துறையினர் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி சுமர் எட்டு இலட்சம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

ரிஷாதின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டி

editor

ஹரீன், மனுசவிற்கான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!