உள்நாடு

பொல்கஹவெல – கொழும்பு கோட்டை வரையான தினசரி அலுவலக புகையிரத சேவை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு)  – புகையிரத சாரதிகளுக்கு தூங்கும் அறை பிரச்சினை காரணமாக பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு கோட்டை வரையான தினசரி அலுவலக புகையிரதம் நேற்று(17) முதல் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொல்கஹவெல ரயில் நிலையத்தில் உள்ள சாரதிகளின் படுக்கையறைகளில் இல.528 பொல்கஹவெல – கொழும்பு புகையிரதத்தின் சாரதியின் படுக்கையறை உள்ளதுடன் அந்த அறையில் கண்டி – பொல்கஹவெல புகையிரதத்தின் சாரதியினை உறங்குவதற்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலக்கம் 528 புகையிரதத்தின் சாரதிகள் தனது சேவையில் இருந்து விலகியுள்ளதாக ரயில் நிலைய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

editor

160 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு நோக்கி சென்றமையே தோல்விக்கு காரணம்: வனிந்து ஹசரங்க

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

editor