உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு)- தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ மத்திய மாகாணத்தில் இருந்து கொரோனா ஒழிப்புப் பணிக்காக பொலிஸ் மா அதிபருக்கு உதவும் பின்னணியில் இடம்பெறும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும் பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், பொலிஸ் அத்தியட்சகர்கள் நால்வருக்கு மகளிர் பொலிஸ் அத்தியட்சகர்களாகவும் பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக நால்வருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் களமிறங்குகிறார் காசிலிங்கம்

editor

ரிஷாதின் கைதுக்கு எதிராக கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் தனி நபர் பிரேரணை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பள்ளிவாசல்களை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் எச்சரிக்கை

editor