உள்நாடு

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பொருளாதார சபை

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பொருளாதார சபையொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

பாதுகாப்புச் சபை போன்று வாரந்தோறும் கூடும் பொருளாதாரச் சபையே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் பொறுப்பு வகிக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்

பதவிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்திருந்தால் வழக்கு

ராஜகிரிய விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் பலி