உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | பொரள்ளை துப்பாக்கிச் சூடு – காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

கொழும்பு, பொரள்ளை சகஸ்ரபுர பகுதியில் சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை (07) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஐந்து இளைஞர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இவ்வாறு காயமடைந்த ஐவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் களனி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்,, கொழும்பு 9 ஐச் சேர்ந்த 21, 22 மற்றும் 23 வயதுடைய நான்கு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

வீடியோ

Related posts

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமனம்

ரயில் சேவை நேர அட்டவணைகளில் மாற்றம் – யானை- ரயில் மோதல்களைக் குறைப்பதற்காக நடவடிக்கை

editor

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு