அரசியல்உள்நாடு

பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 1,259 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை) 1,259 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 342 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 873 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 13 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 31 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

பெற்றோரின் கவனயீனத்தால் வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீர் தேக்கத்தில் விழுந்து பரிதாபமாக பலியான குழந்தை

editor

புத்தாண்டு விடுமுறைக்காக மகளை அழைத்து வரச்சென்ற தந்தை விபத்தில் சிக்கி பலி

editor