உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு த.தே.கூ கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) –நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமை காரணமாக பொதுத் தேர்தலை பிற்போடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் நிலவும் அசாதரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கையை அரசு என்ற வகையில் எடுக்கவேண்டும் என்பதுடன் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மக்களின் பாதுகாப்புக்கு கருசணை வழங்கும் நோக்கில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 திகதி நடைபெறவுள்ள பொது தேர்தலை பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஒருநாள் சேவையில் தே.அ.அ வழங்க நடவடிக்கை

மூதூர் மஜீத் கிராமம் (வேதத்தீவு) கிராமத்திற்கு உதுமாலெப்பை எம்.பி திடீர் விஜயம்

editor

நீர்த்தேக்கங்களை சூழவுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கோரிக்கை