உள்நாடு

 பொது மக்களை அவதானமாக இருக்க எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  பொது மக்களை அவதானமாக இருக்க எச்சரிக்கை

காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் இந்த நாட்களில் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் இந்த வைரஸ் தொற்றுநோய்களைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்கள் உயிரைக் கூட இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க, இந்த நாட்களில் மக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள்தெரிவித்துள்ளனர்.

மேலும், சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இன்றைய நாட்களில் பொதுமக்களிடையே அதிகம் காணப்படுவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நோய்கள் தொற்றக்கூடியவை, இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தரம் 10 இற்கு மேற்பட்ட வகுப்புகள் நாளை முதல் மீள ஆரம்பம்

புதிய கொரோனா வைரஸ் : எதிராக விஷேட நடவடிக்கை

மேற்கு கொள்கலன் முனைய ஒப்பந்தம் தொடர்பில் அதானி நிறுவனம் அறிவிப்பு