உள்நாடுவணிகம்

பேலியகொடை மீன் சந்தை 3 நாட்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – பேலியகொடை பகுதியில் உள்ள மீன் சந்தையை நாளை(22) முதல் 3 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிலியந்தலை பகுதியில் உள்ள மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

குறித்த மீன் வியாபாரி ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று மீன் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுட்டதை தொடர்ந்தே பேலியகொடை மீன் சந்தையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் உள்ள அதன் விற்பனையாளர்கள் நாளை(22) PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாராளுமன்ற தேர்தல் – வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

editor

ஊடகத்துறைக்கு புதிய பதில் அமைச்சர்!

இலங்கையர்கள் 278 பேர் நாடு திரும்பினர்