உள்நாடு

பேரூந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த லொறியின் சாரதி கைது

(UTV | கொழும்பு) – லுணுகலை – பதுளை வீதியில், பசறை – 13ஆம் கட்டையில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தின் போது, விபத்துக்குள்ளான பேரூந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

குறித்த கோர விபத்தில் 9 ஆண்களும், 5 பெண்களும் உட்பட 14 பேர் உயிரிழந்த நிலையில், 5 சிறுவர்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுள், 20 ஆண்களும், 13 பெண்களும் அடங்குகின்றனர்.

Related posts

பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை! 

SLFP : மே தினக் கூட்டம் தொடர்பில் இன்று தீர்மானம்

சந்தர்ப்பங்களை தவற விடாது நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor