உள்நாடு

பேரூந்துகள் முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது

(UTV | கொழும்பு) –  கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பயணிகள் பேரூந்து சேவை இன்று(11) முதல் ஆரம்பமாவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த தூர இடங்களுக்கான பேரூந்துகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் நிறுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து குறுந்தூர பேருந்து சேவைகளும் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு

editor

மருத்துவபீட பரீட்சை நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு