வகைப்படுத்தப்படாத

பேராசிரியர் எம்.ஐ.எம். வஸீர் தென் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

(UDHAYAM, COLOMBO) – பேராசிரியர் எம்.ஐ.எம். வஸீர், தமது பெறுமதியான இரசாயன நூல்கள் பலவற்றை தென் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

இவர் சவூதி அரேபியா, தஹ்ரான் நகரில் மன்னர் பஹத் பெற்றோலிய, கணிய பல்கலைக்கழகத்தில் 35 ஆண்டுகள் கடமையாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்.

தென் கிழக்குப் பல்கலைக் கழக துணை வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமிடம் இவர் இந்த நூல்களை கையளித்தார். இதுதொடர்பான நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில், இடம்பெற்றது.

Related posts

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிதெப் பின் அப்துல்லா விடுவிப்பு

தேர்தல் வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு – 31 பேர் பலி

பாலுறவு கொள்வதற்கான பரஸ்பர சம்மதம் டிஜிட்டல் ஊடாக