அரசியல்உள்நாடு

பெரும் தியாகங்களுடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய நாங்கள் அதனை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை! – திசைகாட்டி எம்பி!

நாட்டின் அதிகாரமும் பிராந்திய அதிகாரமும் பெரும் தியாகங்களைச் செய்தே தங்களால் பெறப்பட்டதாகவும், தாம் கைப்பற்றிய அதிகாரத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்க்ஷ்மன் நிபுணராச்சி கூறுகிறார்.

கெஸ்பேவ நகர சபைத் தலைவரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று, அவர் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்.

‘இன்று நாங்கள் கெஸ்பேவ நகர சபையின் கடமைகளை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டோம்.

நாட்டின் அதிகாரத்தையும் பிராந்திய அதிகாரத்தையும் பெரும் தியாகங்களுடன் நாங்கள் கைப்பற்றினோம். கைப்பற்றப்பட்ட அந்த அதிகாரத்தை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.

ஏனென்றால் நாங்கள் அந்த அதிகாரத்தை எங்களுக்காக அல்ல, நாட்டு மக்களுக்காகக் கைப்பற்றியுள்ளோம் என்றார்.

Related posts

கைதான ஆசிரியர்களை பார்வையிட சென்ற எதிர்கட்சித் தலைவருடன் பொலிசார் முறுகல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று

PCR இயந்திரம் நாளை முதல் பரிசோதனை நடவடிக்கைக்கு