கிசு கிசு

பெண்களுக்கான உள்ளாடைகளை சிறந்த முறையில் தைக்கும் நாடாக இலங்கை…

(UTV|COLOMBO) உலகிலேயே பெண்களுக்கான உள்ளாடைகளை சிறந்த முறையில் தைக்கும் நாடாக இலங்கை விளங்குகிறதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிங்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாம் 77ஆம் ஆண்டு முதலீட்டு அபிவிருத்தி வலயத்தை ஆரம்பித்தப் போது, முதலில் ஆடைத்தொழிற்சாலை​யே திறக்கப்பட்டது. இதற்கு தையல் கடை என்று கூறியதாய் எனக்கு நினைவிலுள்ளது. சிலர் கூறினர் பெண்களுக்கான சிறந்த உள்ளாடைகளை தைப்போம் என்றனர். எனவே பெண்களுக்கான சிறந்த உள்ளாடைகள் இலங்கையிலேயே தைக்கப்படுகின்றன. விக்டோரியா சீக்ரெட்டிடம் கேளுங்கள் எங்கேயிருந்து உள்ளாடைகள் வருகின்றன என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் அளுத்கம இல்லம் மக்களால் சுற்றிவளைப்பு

நெய்மர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா?

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்