உள்நாடுபிராந்தியம்

பெண் ஒருவரின் பணப்பையை திருடிய 39 வயதுடைய பெண் கைது

மட்டக்களப்பு, மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் 20,000 ரூபா பணத்துடன் கூடிய பணப்பையை திருடிய 39 வயது பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை வெல்லாவெளி பொலிஸார் நேற்று (31) இரவு கைது செய்தனர்.

வரலாற்றுப் புகழ்பெற்ற மண்டூர் முருகன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் வேளையில், ஆலயத்தில் தரிசனத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரின் கைப்பை திருடப்பட்டது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் த.றஜிக்காந்தன் தலைமையில், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சசினி (10683) மற்றும் அனுஷ்க்க (61627) ஆகியோர் மேற்கொண்ட விசாரணையில், ஆலயப் பகுதியில் திருடிய பெண்ணை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து திருடப்பட்ட பணப்பையும், அதிலிருந்த 20,000 ரூபாவும் மீட்கப்பட்டன. மேலும், அவரிடமிருந்து கூடுதலாக 65,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர் பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது பெண் எனவும், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-சரவணன்

Related posts

அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட 24 பேருக்கு அழைப்பு

கஜேந்திரகுமார் பிணையில் விடுவிப்பு

editor

நாளைய தினம் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்