உள்நாடு

பூஸ்ஸ சிறைச்சாலை உண்ணாவிரதம் – இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

(UTV | காலி) – கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டமை, தொலைபேசி பாவனை நிறுத்தப்பட்டமை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும்(11) தொடர்கின்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் சிலர் நேற்று(10) முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் குற்றங்களின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 40 கைதிகளுள் 32 கைதிகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கஞ்சிபானை இம்ரான், பொடிலெசி, வெலே சுதா, உள்ளிட்ட கைதிகள் போராட்டத்தில் இருந்து விலகி செயற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று

இன்று முதல் பேரூந்து சேவைகள் மட்டு

பலஸ்தீனில் உயிரிழந்தவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸையும் காயமுற்றவர்களுக்கு பூரண சுகம் கிடைக்கவும் அங்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகவும் பிரார்த்திப்போம் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor