உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் கனமழை – 16 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் பாதிப்பு!

புத்தளம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை சுமார் 16 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம் (NDRSC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களை சேர்ந்த 62 பேர் குறித்த சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்கொடுவ, மஹவெவ, நவகத்தேகம மற்றும் நாத்தாண்டி பிரதேச செயலகங்களுக்கு உற்பட்ட 16 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் இவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

10 கிலோ கிராம் நாட்டரிசியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

பெப்ரவரி முதல் சொகுசு பேருந்துகள் சேவையில்

கொஸ்கொட சுஜிக்கு நெருக்கமானவர் கைது