சூடான செய்திகள் 1

புதிய கூட்டணி உருவானது; தெரிவானார் ஜனாதிபதி வேட்பாளர்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புதிய கூட்டணியின் சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக முன்னணியாக உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியின் யாப்பு தொடர்பாக பங்காளி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

போகம்பர கலாசார நிலையத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது பிரதமர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

புதிய கூட்டணியின் சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சரியான நேரத்தில் அவரது பெயரை அறிவிப்போம்.

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

யாழ் மாநகர மண்டப கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

சைட்டம் -சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்