வகைப்படுத்தப்படாத

புட்டினுடனான சந்திப்பு இன்று!

ரஷிய ஜனாதிபதி புடினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் முதல் முறையாக இன்று ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்து பேச உள்ளனர். இதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் தனது சிறப்பு ரயில் மூலம் சுமார் 9 மணிநேரம் பயணித்து நேற்று (ரஷியா நேரப்படி சுமார் 11 மணியளவில்) விளாடிவோஸ்டோக் நகரை வந்தடைந்தார்.

அந்நிலையில், ரஷிய அதிபர்புடின் இன்று விளாடிவோஸ்டோக் நகருக்கு வந்து சேர்ந்தார். தூர கிழக்கு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

மேலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கிண்ணியா பிரதேசத்தில் அடையாளங் காணப்படாத எந்த நோயும் இல்லை – சுகாதார அமைச்சு

வெள்ள அபாயம்: மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தல்

13 ஆயிரம் அகதிகளை பாலைவனத்திற்கு துரத்திய அல்ஜீரியா