வகைப்படுத்தப்படாத

புகையிரதம் தடம்புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு

(UTV|CHINA) சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளனானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் அலுமினியம் ஏற்றிக் கொண்டு  சென்ற சரக்கு ரெயில் ஒன்று நேற்று இரவு கோங்யி நகர் அருகே சரக்கு ரயில் சென்றபோது திடீரென தடம் புரண்டது.

குறித்த விபத்தில் சிக்கி 6 பேர் மாயமாகினர்.

தகவலறிந்து அங்கு சென்ற ரெயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். குறித்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் மாயமான இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

 

Related posts

116 பயணிகளுடன் இராணுவ விமானம் காணாமல் போயுள்ளது!

ராணி பதவியை பாதுகாப்பற்றதாக உணரும் ஜப்பான் பட்டத்து இளவரசி

தொடர்ந்து 11வது முறையாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி